செய்திகள்
கைது

அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2020-12-02 07:46 GMT   |   Update On 2020-12-02 07:46 GMT
அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே நாகுடி வெள்ளாற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக மணமேல்குடி தாசில்தார் ஜமுனாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்தியதில் கீழ்குடியை சேர்ந்த கூத்தையா (வயது 40), வேலிவயலை சேர்ந்த முனியாண்டி (38) ஆகியோர் 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர்.

அவர்கள் இருவரையும் பிடித்து நாகுடி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News