செய்திகள்
விசைப்படகு

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Published On 2020-11-30 03:28 GMT   |   Update On 2020-11-30 03:28 GMT
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டைப்பட்டினம்:

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாரேனும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்தால் அவர்களுக்கு உடனே தகவல் தெரிவித்து கரைக்கு திரும்பவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News