செய்திகள்
ஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் போலீசார் ஊத்தங்கரை முனியப்பன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது படப்பள்ளியை சேர்ந்த செல்வம் (வயது 50) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.