செய்திகள்
மரணம்

கறம்பக்குடி அருகே எலி மருந்து தின்ற கூலி தொழிலாளி பலி

Published On 2020-11-11 12:22 GMT   |   Update On 2020-11-11 12:22 GMT
கறம்பக்குடி அருகே எலி மருந்து தின்ற கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி தென்னகர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 50). கூலி தொழிலாளியான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக எலி மருந்தை தின்று நரங்கியப்பட்டு வேம்பையன் கோவில் அருகே இறந்து கிடந்தார். இதை கண்ட அப்பகுதியினர் கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரெத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News