செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே நேபாள தொழிலாளி தற்கொலை

Published On 2020-11-11 13:33 IST   |   Update On 2020-11-11 13:33:00 IST
கிருஷ்ணகிரி அருகே நேபாள தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

நேபாளத்தை சேர்ந்தவர் சஞ்சய்ராம் (வயது 34). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சஞ்சய்ராம், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News