செய்திகள்
கைது

காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

Published On 2020-11-10 10:12 IST   |   Update On 2020-11-10 10:12:00 IST
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார், தாவணைக்கரை ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சவுளூர் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த மணி (வயது 60), தாசன்கொட்டாய் மன்னேசன் (42) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம் ரூ.250-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News