செய்திகள்
கைது

கறம்பக்குடி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2020-11-04 09:37 GMT   |   Update On 2020-11-04 09:37 GMT
கறம்பக்குடி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அம்புக்கோவில் முக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பிரபாகரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News