செய்திகள்
மாயம்

விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2020-10-31 14:46 GMT   |   Update On 2020-10-31 14:46 GMT
விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் ஆலடி சாலை எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் அபிநயா(வயது 19). இவர், விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அபிநயா, பெற்றோருடன் தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது அபிநயாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. 

இது குறித்து முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News