செய்திகள்
வழக்கு பதிவு

மேலப்பட்டி அருகே சூதாடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-10-31 14:12 IST   |   Update On 2020-10-31 14:12:00 IST
மேலப்பட்டி அருகே சூதாடிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அன்னவாசல்:

இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மேலப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு மேலப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) உள்பட 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.1,800-ஐ பறிமுதல் செய்தனர்.

Similar News