செய்திகள்
கொரோனா வைரஸ்

புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி- கொரோனாவுக்கு முதியவர் பலி

Published On 2020-10-31 04:53 GMT   |   Update On 2020-10-31 04:53 GMT
புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இது தவிர ஒரே நாளில் 190 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23 ஆயிரத்து 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 48 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து என்.எல்.சி. வந்த ஒருவர், நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 190 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 22 ஆயிரத்து 611 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை 269 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று முதியவர் ஒருவர் பலியானார். இதன் விவரம் வருமாறு:-

குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 63 வயது முதியவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோய் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதித்த 218 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 63 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 417 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Tags:    

Similar News