செய்திகள்
தற்கொலை

தஞ்சை அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-10-28 12:38 GMT   |   Update On 2020-10-28 12:38 GMT
தஞ்சை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சையை அடுத்த சானூரப்பட்டி மேல தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் வெற்றிச்செல்வன் (வயது36). இவர் செங்கிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பிட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லாமல் வெற்றிச்செல்வன் வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வயிற்றுவலி காரணமாக மனவேதனை அடைந்த அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News