செய்திகள்
கைது

ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடியவர் கைது

Published On 2020-10-28 09:04 GMT   |   Update On 2020-10-28 09:04 GMT
ஈரோட்டில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ. 2003-ஐ திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு உப்புகிணறு சந்து பகுதியை சேர்ந்தவர் முகமது ரியாசுதீன் (வயது 42). இவர் நேற்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். அந்த பஸ் பெரியமாரியம்மன் கோவில் பகுதியில் மெதுவாக சென்றபோது முகமது ரியாசுதீனிடம் இருந்து ஒருவர் ரூ.200-ஐ திருடிவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். 

சக பயணிகள் அந்த நபரை பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர், ஈரோடு வளையக்காரவீதியை சேர்ந்த மீராமைதீன் (38) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News