செய்திகள்
மகராஜகடை அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
மகராஜகடை அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
மகராஜகடை அருகே உள்ள கள்ளக்குறி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மது போதையில் அவர் வீட்டுக்கு வந்ததால், அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு விஷம் குடித்து விட்டு வீட்டு அருகில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.