செய்திகள்
கைது

லாட்டரி சீட்டுக்கள் விற்ற 6 பேர் கைது

Published On 2020-10-27 05:06 GMT   |   Update On 2020-10-27 05:06 GMT
கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டுக்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 49), பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்த பால் செல்வம் (60), புலியூரை சேர்ந்த முகமது (40), அரசம்பட்டியை சேர்ந்த கந்தன் (46), ரகமத் காலனியை சேர்ந்த நாகராஜ் (54), ஊத்தங்கரையை சேர்ந்த முகமது ரபிக் (48) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.1,300 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News