செய்திகள்
கைது

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2020-10-26 12:54 IST   |   Update On 2020-10-26 12:54:00 IST
விருத்தாசலம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை, (வயது 20). கூலி தொழிலாளியான இவர் கடந்த 16-ந் தேதி, அதேபகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News