செய்திகள்
கைது

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2020-10-26 07:24 GMT   |   Update On 2020-10-26 07:24 GMT
விருத்தாசலம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை, (வயது 20). கூலி தொழிலாளியான இவர் கடந்த 16-ந் தேதி, அதேபகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News