செய்திகள்
விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
விருத்தாசலம் அருகே பெண்களை இழிவுபடுத்திவரும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனுதர்ம நூலின் நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு மாநில துணை செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் திருஞானம், சுப்பு ஜோதி, மாநில துணை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசி வருபவரை கைது செய்ய வேண்டும்,
பெண்களை இழிவுபடுத்திவரும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து மனுதர்ம நூலின் நகல்களை நடுரோட்டில் எரிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீயை அணைத்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதில் ஒன்றிய பொருளாளர் எழில்வான்சிறப்பு, வக்கீல் தன்ராஜ், மேட்டு காலனி முருகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மருதையன், வக்கீல் வைரமுத்து, கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் வீரச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.