செய்திகள்
நெய்வேலியில் செவிலியரை தாக்கியவர் கைது
நெய்வேலியில் பணத் தகராறில் செவிலியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி:
நெய்வேலி வட்டம் 6 என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 53). இவர் என்.எல்.சி. மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் ராஜேந்திரன் உயிரோடு இருந்தபோது, அவருக்கு கார் ஓட்டிய வகையில் பாக்கி இருப்பதாக சொல்லி சொரத்தூர் புது தெருவை சேர்ந்த அய்யப்பன் (28) என்பவர் பத்மாவதியிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்மாவதி என்.எல்.சி. மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு சென்ற அய்யப்பன், பத்மாவதியிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பத்மாவதி சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.