செய்திகள்
குடியாத்தம் அருகே விபத்து- தந்தை, மகன் பலி
குடியாத்தம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்து மோதியதில் ஆட்டோவில் சென்ற தந்தை சிவா, மகன் சஞ்சய் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்து மோதியதில் ஆட்டோவில் சென்ற தந்தை சிவா, மகன் சஞ்சய் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.