செய்திகள்
உடல்நல சிகிச்சைக்காக 3 மாதம் பரோல் கேட்டு நளினி மனு
நளினி தன்னுடைய உடல்நல சிகிச்சைக்காக 3 மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளருக்கு சிறைத்துறை அதிகாரிகள் வழியாக மனு அளித்துள்ளார்
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நளினியின் மகள் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் நளினி 3 மாதம் பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவரது வக்கீல் புகழேந்தி கூறுகையில், ‘சிறை விதிகளுக்குட்பட்டு நளினி தொலைபேசி மூலம் இன்று (நேற்று) என்னிடம் பேசினார். அப்போது அவர் தன்னுடைய உடல்நல சிகிச்சைக்காக 3 மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளருக்கு சிறைத்துறை அதிகாரிகள் வழியாக மனு அளித்துள்ளார்’ என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நளினியின் மகள் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் நளினி 3 மாதம் பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவரது வக்கீல் புகழேந்தி கூறுகையில், ‘சிறை விதிகளுக்குட்பட்டு நளினி தொலைபேசி மூலம் இன்று (நேற்று) என்னிடம் பேசினார். அப்போது அவர் தன்னுடைய உடல்நல சிகிச்சைக்காக 3 மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளருக்கு சிறைத்துறை அதிகாரிகள் வழியாக மனு அளித்துள்ளார்’ என்றார்.