செய்திகள்
கைது

கம்மாபுரம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய முயற்சி- டிரைவர் கைது

Published On 2020-10-10 19:59 IST   |   Update On 2020-10-10 19:59:00 IST
கம்மாபுரம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கம்மாபுரம்:

அரியலூர் மாவட்டம் கூவத்தூர் அணிகுறிச்சான் சாலையை சேர்ந்தவர் பன்னீர் மகன் தினேஷ்(வயது 23). டிரைவர். இவர், கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, வீட்டில் இருந்து அழைத்துச்சென்றார். 

இது குறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தினேஷ் அந்த மாணவியை திருமணம் செய்ய அழைத்துச்சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தினேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Similar News