செய்திகள்
சூளகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
சூளகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி போலீசார் தொட்டூர் முனீஸ்வரன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய எலத்தகிரி ராம் நகரைச் சேர்ந்த முருகன் (வயது 38), கூலியம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (33), எலசேப்பள்ளியைச் சேர்ந்த முரளி (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.29 ஆயிரத்து 760 பறிமுதல் செய்யப்பட்டது.