செய்திகள்
கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் ரத்தினகிரி ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள மலை அடிவாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தடிக்கல் அருகே உள்ள முத்துராயன் கொட்டாய் பகுதியை சேர்ந்த எல்லப்பன் (வயது 19), அனுசோனை ராமராஜ்(21), பேவநத்தம் ராமன் (29), லகுமேஷ் (22), பாலகுறியைச் சேர்ந்த அருண்குமார் (20) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.