செய்திகள்
ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
வேதாரண்யம் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கோடியக்கரை கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்று பேசிக்கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் ஒருவர் சுரேஷ்(வயது 31) என்றும், அவர் கையில் வைத்திருந்த செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை செய்து வைத்திருந்த ரூ.200-ஐ கைப்பற்றினர். மேலும் இதில் தொடர்புடையவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.