செய்திகள்
கொரோனா பரிசோதனை

ஆந்தக்குடி ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-09-28 10:07 GMT   |   Update On 2020-09-28 10:07 GMT
கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சிக்கல்:

ழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் அகிலன் தலைமையில் மருத்துவர் குழு மற்றும் பொதுசுகாதாரத்துறை ஆய்வக தொழில் நுட்ப அலுவலர்கள் அந்த பகுதியில் வசித்து வரும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் அருண் மணிகண்டன் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுகுணா, ஊராட்சி உறுப்பினர்கள் வேம்பு, ரமேஷ், பூபதி, சுரேஷ், ஊராட்சி செயலாளர் செல்லத்துரை மற்றும் அங்கன்வாடி, சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News