செய்திகள்
கோப்புபடம்

வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை

Published On 2020-09-26 14:14 GMT   |   Update On 2020-09-26 14:14 GMT
ஓசூர் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அட்டகுறுக்கியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி நந்து (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 2-வது குழந்தை பிறந்தது முதல் உடல் நலக்குறைவால் நந்து அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காாணப்பட்ட நந்து ஓசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நந்து இறந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாரூர் அருகே உள்ள பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி வசந்தி (32). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு முனியப்பன், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது வசந்தி வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வசந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News