செய்திகள்
கொரோனா பரிசோதனை

பூதங்குடியில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-09-26 10:10 GMT   |   Update On 2020-09-26 10:10 GMT
திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மருத்துவர்கள் மணிவேல், பிரித்திவிராஜ், சுகாதார ஆய்வாளர்கள் பரமநாதன், பிரபாகர் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். முகாமை திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் பார்வையிட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனிபாலாஜி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குமார், ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News