செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே வாகனம் மோதி வேன் டிரைவர் பலி

Published On 2020-09-26 08:19 GMT   |   Update On 2020-09-26 08:19 GMT
சூளகிரி அருகே விபத்தில் வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டி.கே.புரம் புதுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). வேன் டிரைவர். சம்பவத்தன்று சூளகிரி அருகே உள்ள குருபராத்பள்ளி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News