செய்திகள்
மத்திகிரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மத்திகிரி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
ஓசூர் தாலுகா மத்திகிரி அன்னை நகரை சேர்ந்தவர் தனுஷ்ராஜ் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் விஷம் குடித்து தற்கெலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி நிரோஷா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ்ராஜ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.