செய்திகள்
காட்பாடியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கடையில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
காட்பாடி திருநகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், தாராபடவேட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் மோட்டார் சைக்கிளை திருடியது தோட்டபாளையத்தை சேர்ந்த 18 வயதுடைய வாலிபர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.