செய்திகள்
இடையூறு செய்யும் வாகனங்களுக்கு அபராதம்
மானாமதுரை அருகே இடையூறு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மானாமதுரை:
மானாமதுரை டவுன் பகுதிகளில் ரோடுகளை ஒட்டியுள்ள டீ, பலசரக்கு கடைக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வருபவர்கள் கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதையடுத்து கடைகளுக்கு முன்பாக ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.