செய்திகள்
லாரியில் ஏற்றி வந்த கரும்புகளை தின்ற யானை

லாரியில் ஏற்றி வந்த கரும்புகளை தின்ற யானை- டிரைவர்கள் ஓட்டம்

Published On 2020-09-06 07:29 GMT   |   Update On 2020-09-06 07:29 GMT
தாளவாடி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானையை கண்ட டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். லாரியில் இருந்த கரும்புகளை சிறிது நேரம் தின்ற யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
தாளவாடி:

தாளவாடியை அடுத்துள்ள புளிஞ்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதனால் லாரிகள் அனைத்தும் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளும் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை அங்கு வந்தது. இதனை பார்த்ததும் லாரி டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். லாரியில் இருந்த கரும்புகளை சிறிது நேரம் தின்ற யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

ஒற்றை யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News