செய்திகள்
திருமணத்தை அடுத்த ஆண்டு தள்ளிப்போட்டதால் விரக்தியில் வாலிபர் தற்கொலை
திருப்பத்தூர் அருகே இன்று நடக்க இருந்த நிலையில் திருமணத்தை அடுத்த ஆண்டு தள்ளிப்போட்டதால் விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே வெங்கடேஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது29). கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் வாணியம்பாடி கோணாமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் பெண் வீட்டார் திருமணத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்ததும் நடத்தி கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இதை கேட்டு கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியடைந்தார். மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை ரோடு 4-வது தெருவில் வசித்து வருபவர் ரவி. அவரது மகன் ஜெகதீசன் (29). சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார்.
அவர் திடீரென தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே வெங்கடேஸ்வரர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது29). கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் வாணியம்பாடி கோணாமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் பெண் வீட்டார் திருமணத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்ததும் நடத்தி கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இதை கேட்டு கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியடைந்தார். மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை ரோடு 4-வது தெருவில் வசித்து வருபவர் ரவி. அவரது மகன் ஜெகதீசன் (29). சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார்.
அவர் திடீரென தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.