செய்திகள்
பிடிபட்ட பாம்பு

சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் கோதுமை நாகம் பிடிபட்டது

Published On 2020-09-02 19:00 IST   |   Update On 2020-09-02 19:00:00 IST
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் கோதுமை நாகம் பிடிபட்டது. அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்குள் பாம்பு புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நேரத்திற்கு பின்னர் சிறிய பொந்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். இந்த பாம்பு கோதுமை நாகம் ஆகும். அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Similar News