செய்திகள்
இளையான்குடி அருகே மணல் அள்ளியவர் மீது வழக்கு
இளையான்குடி அருகே மணல் அள்ளியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே கலங்காதன்கோட்டை கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கலங்காதன் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முருகன் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணல் அள்ளியதாக கல்லணி கிராமத்தை சேர்ந்த கர்ணன் மீது வழக்கு பதிவு செய்து இளையான்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.