செய்திகள்
காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் திருகாளிமேடு அருந்ததிநகர் பகுதியில் வசிப்பவர் பூபாலன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக பூபாலன் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்வாதாரமின்றி தவித்து வந்த அவர், கடன்தொல்லைக்கு உள்ளானார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட பூபாலன், வீட்டில் தூக்குபோட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.