செய்திகள்
மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்று பகுதியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தப்படுவதாக பாலுச்செட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தீனா (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.