செய்திகள்
கைது

விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு- சாயத்தொழிற்சாலை உரிமையாளர்கள் 5 பேர் கைது

Published On 2020-08-22 13:32 IST   |   Update On 2020-08-22 13:32:00 IST
காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலியான வழக்கில் சாயத்தொழிற்சாலை உரிமையாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற லட்சுமணன், விஷ வாயு தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற சுனில் என்பவரும் விஷவாயு தாக்கி இறந்தார்.

இதுபற்றி வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சாயத்தொழிற்சாலை உரிமையாளர்களான பாலாஜி (வயது 52), ரவிக்குமார் (54), சீனிவாசன் (44), ஆறுமுகம் (41), ஜெயக்குமார் (55) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Similar News