செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-08-21 15:47 IST   |   Update On 2020-08-21 15:47:00 IST
வில்லியனூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின்னர் அவர் தனது மகன் குமரேசன் வீட்டில் வசித்து வந்தார். மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்து வந்த குணசேகரன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News