செய்திகள்
ஆண்டிமடத்தில் கார் மோதி தொழிலாளி பலி
ஆண்டிமடத்தில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்- விளந்தை தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 40). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக தனது சைக்கிளில் அருளானந்தபுரம் கிராமத்திற்கு செல்வதற்காக ஆண்டிமடம்- ஜெயங்கொண்டம் சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார், சைக்கிளில் சென்ற குமார் மீது மோதியது.
மேலும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதி நின்றது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் அங்கு வந்து, குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம், சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த இளவரசனை(31) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.