செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர், லாரி மோதி பலி
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண்டிமடம்:
நாகை மாவட்டம், சிவராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 37). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி செல்வதற்காக ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் ராங்கியம் கிராமம் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகேசன் பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் அரியலூர் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்த கிஷோர்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.