செய்திகள்
கைது

இறைச்சி கடைக்காரரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

Published On 2020-08-13 10:13 GMT   |   Update On 2020-08-13 10:13 GMT
இறைச்சி கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பம் சாராயக்கடை அருகே பாஸ்கர் என்பவர் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கடைக்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் பாஸ்கர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், பதிவாகி இருந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் மடுவுபேட் பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற மணிவண்ணன், சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த கண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் தான் பணம் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரித்ததில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சாலையோர கடையில் 3 பேரும் 750 ரூபாய்க்கு பனியன் எடுத்து விட்டு பணம் கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News