செய்திகள்
மறைமுக ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

Published On 2020-08-13 12:18 IST   |   Update On 2020-08-13 12:18:00 IST
ஜெயங்கொண்டத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
ஜெயங்கொண்டம்:

தமிழ்நாடு அரசின் மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பாண்டு முதல் முறையாக பருத்தி விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் நடத்தப்பட்டது.

ஏலத்தில் 452 விவசாயிகள் கொண்டு வந்த 1,345.58 குவிண்டால் பருத்தி ரூ.68 லட்சத்து 99 ஆயிரத்து 576-க்கு விற்பனையானதாக பெரம்பலூர் விற்பனைக்குழுவின் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த ஏலத்தில் மத்திய அரசின் இந்திய பருத்தி கழகம், அரியலூர் கும்பகோணம், செம்பனார் கோவில் மற்றும் விழுப்புரம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்றனர்.

இந்திய பருத்தி கழகத்தினால் அதிகபட்ச தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 550-க்கும், குறைந்தப்பட்ச விலையாக ரூ.5,182-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. தனியார் வியாபாரிகளால் உயர்ந்தப்பட்ச விலையாக ரூ.4,339-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.4,169-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. விற்பனையான மொத்த பருத்தியானது 1,345.58 குவிண்டாலில் 1,051.46 குவிண்டால் அதாவது 75 சதவீத குவிண்டால் பருத்தியை இந்திய பருத்தி கழகமே கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Similar News