செய்திகள்
வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
வேதாரண்யம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தோப்புத்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு லாட்டரி விற்ற நாகை அருகே உள்ள சிக்கல் கிராமத்தை சேர்ந்த அம்பிகாபதி (வயது43) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.1,220, ஆன்லைன் லாட்டரிக்காக அவர் பயன்படுத்திய செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.