செய்திகள்
சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி
சீர்காழி நகராட்சி சார்பில் சீர்காழி புறவழிச்சாலை முதல் மயிலாடுதுறை சாலை வரை கழுமலை ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
சீர்காழி:
சீர்காழி அருகே கொண்டல், தேனூர், பத்தக்குடி, கொட்டாய்மேடு, வள்ளுவக்குடி, மருதங்குடி, நிம்மேலி, அரூர், அகனி, ஆலஞ்சேரி, கோவில்பத்து, சட்டநாதபுரம், கைவிளாஞ்சேரி, சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், சிவனார்விளாகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விளை நிலங்கள் சீர்காழி கழுமலை ஆறு பாசன வாய்க்காலை நம்பி உள்ளன.
இந்தநிலையில் சீர்காழி புறவழிச்சாலை முதல் மயிலாடுதுறை சாலை வரை சீர்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பாசன வாய்க்கால்களில் பாலித்தீன் பைகள், குப்பை கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்தநிலையில் சீர்காழி கழுமலை ஆறு பாசன சங்கம் மற்றும் பொதுப்பணித்துறையினரின் வேண்டுகோளை ஏற்று சீர்காழி நகராட்சி சார்பில் சீர்காழி புறவழிச்சாலை முதல் மயிலாடுதுறை சாலை வரை கழுமலை ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லை விடங்கன், திருத்தோணிபுரம். வனார்விளாகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சீர்காழி நகராட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.