செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் மேலும் 276 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-11 21:00 GMT   |   Update On 2020-08-11 21:00 GMT
புதுச்சேரியில் ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில், புதுச்சேரியில் ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 3,532 பேர் குணடைந்துள்ளனர்.
Tags:    

Similar News