செய்திகள்
மருத்துவ முகாம்

திருமருகலில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-08-11 16:27 IST   |   Update On 2020-08-11 16:27:00 IST
திருமருகல் ஒன்றிய பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றிய பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வள்ளுவன் தோப்பு பகுதியில் 500 -க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர் திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மருத்துவர் மணிவேல் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் லதா சக்திவேல் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News