செய்திகள்
கைது

சாராயம் விற்ற பெண் கைது

Published On 2020-08-11 10:52 GMT   |   Update On 2020-08-11 10:52 GMT
நாகூர் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:

நாகூரை அடுத்த கொட்டரக்குடியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொட்டரக்குடி முக்கடையை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி கார்த்திகா (வயது 28) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகாவை கைது செய்து, அவரிடம் இருந்த 55 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News