செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுக்கோட்டையில் இன்று மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-09 03:37 GMT   |   Update On 2020-08-09 03:37 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 135 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,185 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 135 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,185 ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News