செய்திகள்
வடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி

வடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

Published On 2020-08-06 13:42 GMT   |   Update On 2020-08-06 13:42 GMT
குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம் மற்றும் வடலூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் வடலூரில் நடந்தது.
குறிஞ்சிப்பாடி:

குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம் மற்றும் வடலூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் வடலூரில் நடந்தது. கூட்டத்திற்கு குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி தலைமை தாங்கினார். வடலூர் நகர செயலாளர் கண்ணன், பங்க் சுரேஷ், சசி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் பார்த்திபன் வரவேற்றார். 

கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழாவினை குறிஞ்சிப்பாடி பகுதி ஒன்றிய கிராமங்கள் தோறும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வக்கீல் பாண்டியன், துணை செயலாளர்கள் வீராசாமி, எம்.ஜி.ஆர். ஜெயச்சந்திரன், சிற்றரசு, பாக்கியராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News