செய்திகள்
கைது

விவசாயி கொலை வழக்கில் 2 பேர் கைது

Published On 2020-08-04 15:20 IST   |   Update On 2020-08-04 15:20:00 IST
அறந்தாங்கி அருகே விவசாயி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே ஆயிங்குடி தெற்கு பகுதியை சேர்ந்தவர் குண்டு என்ற குண்டுபிள்ளை(வயது 75). விவசாயியான இவர், சொத்து பிரச்சினையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குண்டுபிள்ளையின் தம்பி நாகலிங்கத்தை(67) கைது செய்தனர். மேலும் நாகலிங்கத்தின் மகன் சண்முகநாதன்(30), குண்டுபிள்ளையின் மற்றொரு தம்பி சுப்பிரமணியின் மகன் செல்வராஜ் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சண்முகநாதன், செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News